ஒரு மாநிலத்தில் முதலமைச்சரின் கடமை என்னவென்றால் :
12 ம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வி திட்டம் கொண்டு வந்து 10ம் வகுப்பிலோ அல்லது 12ம் வகுப்பிலோ 95% க்கும் மேல் மதிப்பெண் பெறுபவருக்கு மேற்கொண்டு என்ன படிப்பு படிக்க வேண்டுமானாலும் அதை அரசு இலவசமாக கற்ப்பிக்க வேண்டும் உலக தரம் வாய்ந்த கல்வியை கற்ப்பிக்க வேண்டும்
நீங்கள் எத்தனை வயதுவரை வேண்டுமானாலும் படிக்கலாம். 18 வயதுக்கு மேற்ப்பட்ட படித்தவன் படிக்காதவன் அனைவருக்கும் அரசு வேலை வழங்க வேண்டும்
உழைப்பிற்க்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும்
ஒவ்வொரு மாவட்டத்திலும் 35% நிலம் விவசாயத்திற்கு ஒதுக்க வேண்டும் நீர் வளத்தை பெருக்க மரம் நடுதல் மழை நீரை சேகரித்தல் மலை அடிவாரங்களில் இருந்து வரும் தண்ணீரை சேமிக்க அணை கட்ட வேண்டும் குளம் வெட்டுதல் ஏரி வெட்டுதல் கடல் நீரை குடிநீரை ஆக்கும் திட்டம் கொண்டுவந்து குழாய் மூலம் விவாசாயத்திற்கு தண்ணீரை செலுத்துதல் சாக்கடை தண்ணீரை குடிநீர் ஆக மாற்றும் திட்டம் கொண்டுவருதல்
இயற்க்கையை அழிக்கும் அத்தனை சீமைகருவேலமரத்தை ஒழித்து மனித உணவுக்கு தேவையான மரங்களை வளர்த்தல்
சூரிய வெப்பத்தில் இருந்து மின்சாரம் தயாரித்து தங்கு தடையில்லாத மின்சாரம் வழங்குதல்
மாநிலத்தில் உள்ளவர்கள் மாநிலத்தை விட்டு வெளிமாநிலத்திலோ அல்லது வெளி நாடுகளிலோ இருந்தால் அவர்களை பாதுகாக்க பலமான சட்டம் அமைத்தல்
சட்டம் அனைவருக்கும் சமம் அதேபோல் அனைவருக்கும் சம உரிமை வழங்குதல் எல்லா விதத்திலும்
அனைத்து நோய்களை குணப்படுத்த உலக தரம் வாய்ந்த அரசு இலவச மருத்துவமனை அமைத்து நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்தல்
மாநிலத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க ஒரு வருத்திற்கு ஒருமுறை சட்டத்தை திருத்த வேண்டும்
அவரவர் கடமையை ஒழுங்காக செய்ய வேண்டும் யாராவது ஒருவன் கடமையை மீறினால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எவருக்கு எந்த திறமை இருக்கிறதோ அவரை அந்த பொறுப்பில் போட வேண்டும்
மேற்கூறியவற்றை நிறை வேற்ற மாநிலத்தை ஆளும் முதலமைச்சருக்கு ஒரு வருடம் போதும்
- வாக்காளர் கிறிஸ்து ராஜா 7598506173
(கன்னியாகுமரி மாவட்டம்)
No comments:
Post a Comment