கனவுகள் பலிக்குமா?
❂ முன்னோர்களின் கூற்றுப்படி மனிதர்கள் அதிகாலையில் கண்ட கனவுகள் பலிக்கும் என்று சொல்லப்படுகிறது.
❂ கனவுகள் என்பது ஒருவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது, அவர்களின் உள்மனதில் ஆழமாக பதிந்திருக்கும் சில நிகழ்வுகள், அவர்களை அறியாமலே தோன்றும் ஒரு விதமான உணர்வு ஆகும். இந்த நிகழ்வை தான் கனவுகள் என்கிறோம். ❂ கனவுகள் ஆனது பகல், இரவு மற்றும் விடியற்காலை என எந்த நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்தாலும் தோன்றக்கூடிய ஒரு நிகழ்வு ஆகும். அதில் விடியற்காலையில் தோன்றும் கனவுகள் பலிக்கும் என சொல்லப்படுகிறது. விடியற் காலையில் கண்ட கனவுகள் பலிக்குமா?
❂ மனிதனின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு வகை கண்ணாடியாகத் தான் கனவுகள் திகழ்கிறது. விஞ்ஞான ரீதியாக ஒருவருக்கு தோன்றும், பகல் மற்றும் இரவு ஆகிய இரண்டு நேரங்களிலும் தோன்றும் கனவுகள் அனைத்துமே ஒன்று தான் என்று கூறுகின்றார்கள்.
❂ நம்முடைய ஆழ்ந்த தூக்கத்தின் அறிகுறியைத் தான், நாம் அனைவரும் கனவு என்று நினைக்கிறோம் என்பதை மட்டும் உறுதியாக கூற முடியும். எனவே இது போன்ற நிகழ்வுகள் (கனவுகள்) அனைத்தும் மனிதர்களின் நம்பிக்கையே தவிர, கனவுகள் பலிக்கும் என்பதற்கான எந்த விதமான ஆதாரமும் ஒன்று கூட இதுவரை இல்லை.
❂ ஆகையால் விதை விதைத்தவன் விதை அறுப்பான் என்ற கூற்றிற்கேற்ப, நமது வாழ்க்கையின் சிந்தனையில் தௌpவும், நல்ல எண்ணங்களையும் மட்டுமே கொண்டிருந்தால், நமக்கு என்றும் நல்லதே நடக்கும் என்று முன்னோர்கள் கூறுகின்றார்கள்.
Wednesday, 1 February 2017
DREAM BENIFITS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment